Thursday, January 03, 2008

பூக்களில் உறங்கும் மெளனங்கள்



என் காதல்
நேற்று வரை
மொட்டாய் இருந்தது
இன்று
மென்பட்டுப் பூவாய் மலர்ந்தது
காலை பனித்துளி காயும்முன்
காதல் சொல்ல மலரைக் கொய்தேன்
மாலை மயங்கும் முன் என்
தேன் நீ, மனதை சொல்லிடு, காத்திருப்பேன்.
--------------

என் காதலனே
நேற்று வரை
மொட்டாய் இருந்தேன்
இன்று
மென்பட்டுப் பூவாய் மலர்ந்தேன்
காலை பனித்துளி காயும்முன்
உன்மேல் காதல் கொண்டேன்
மாலையில் மணம் விட்டு காதல் சொல்ல
தேனீ, உனக்காக காத்திருந்....

பூக்களில் உறங்கும் மெளனங்கள்..

2 comments:

cheena (சீனா) said...

ஆகா, ஆகா - அருமை - கவிதை புனைந்திருக்கும் விதம் - உண்மையிலேயே மௌனம் தான்

amirthan (அமிர்தன்) said...

சினா,
தாங்கள் ஒருவரே என் கவிதையின் பொருள் அறிந்து வாழ்த்தியவர், அதற்கு மிக்க நன்றி.